பாரத் ஜோடோ சுத்த வேஸ்ட் – சீமான் கருத்து!

பாரத் ஜோடோ சுத்த வேஸ்ட் – சீமான் கருத்து!

Share it if you like it

ராகுல் காந்தியின் நடை பயணத்தால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவர், இந்திய ஒற்றுமை பயணம் ( பாரத் ஜோடோ யாத்திரா ) எனும் பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த, பயணத்தில் பல்வேறு நகைச்சுவை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனிடையே, சென்னை சின்னப் போரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், வீரமங்கை வேலூநாச்சியாரின் 226-வது நினைவு தினம் மற்றும் கீழ் வெண்மணியில் உயிர் இழந்தவர்களின் 54 – ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ படத்திற்கு சீமான் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ராகுல் காந்தியின் நடை பயணத்தால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என கிண்டலாக பதில் அளித்தார்.


Share it if you like it