கொசுவை தொடர்ந்து ஈ கதை கூறிய சீமான்!

கொசுவை தொடர்ந்து ஈ கதை கூறிய சீமான்!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈ. குறித்து பேசிய காணொளி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கட்சியில் இருக்கும் சொச்சம், மிச்சம் தம்பிகள் மற்றும் தங்கைகள் மாற்று கட்சிக்கு ஓடிவிடக் கூடாது என்பதற்காக இன்று ஒரு தகவல் என்பது போல இன்று ஒரு கதையை தினம் தினம் சீமான் கூறிவருகிறார். பிறவியிலேயே காது கேட்காதவர்கள் கூட என் பேச்சை கேட்பதாக ஒருமுறை மேடையில் முழங்கியிருந்தார். தம்பி நான் சென்று இலங்கையில் பாடி விட்டு வரட்டுமா என்று எஸ்.பி.பி. தன்னிடம் அனுமதி கேட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து, தனது முதுகில் கொட்டிய விஷத்தேள் இறந்ததை பற்றி பேசியிருந்தார். இப்படி, சீமான் அள்ளி விடும் கதைகள் ஏராளம்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பதற்கேற்ப இவர் கூறும் பொய்க் கதைகளை அறிவார்ந்த தமிழக மக்கள் உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகின்றனர். இதன்காரணமாக, சீமானின் உண்மையான சுயரூபம் தெரிந்த தம்பி, தங்கைகள் மாற்று கட்சிக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில், பலம் படைத்த காட்டெருமை ஒன்றை கொசுக் கூட்டம் வீழ்த்தியதாக சமீபத்தில் தம்பிகள் முன்பு கூறியிருந்தார். இது எங்கேயோ பார்த்த படம் போல உள்ளதே என நெட்டிசன்கள் சீமானை வறுத்தெடுத்து இருந்தனர்.

இந்நிலையில், ஈ. பற்றி சீமான் பேசியிருப்பதாவது; மாவட்ட ஆட்சியரும் ஐயா காமராஜரும் உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது, இருவருக்கும் டீ வருகிறது. ஐயா வாங்கிய டீ-யில் ஈ துடித்து கொண்டு இருக்கிறது. அருகில் இருந்த ஆட்சியரும் அதனை பார்க்கிறார். உடனே தனது விரலை விட்டு அந்த ஈ-யை வெளியே விட்டு விடுகிறார் ஐயா. கலெக்டரிம் சொல்கிறார் உனக்கு டீ முக்கியம் எனக்கு உள்ளே விழுந்த ஈ முக்கியம். (இடையில் ஒரு சிரிப்பு) இந்த டீ இல்லை என்றால் வேறு டீயை குடிக்கலாம் உள்ளே துடித்து கொண்டு இருந்த ஈ-யை எடுக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றவில்லையே நீ எப்படி மக்களின் பிரச்சனையை தீர்ப்பாய் இனி நீ சரிவர மாட்டே போ என்று கூறியதாக அக்காணொளியில் சீமான் கூறியுள்ளார்.

அதன் லிங்க் இதோ.

இந்த கதைதான் தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. பொய் சொல்லியே வாழும் இந்த கொய்யாத் தோப்பு கோணிப் புளுகனை கைது செய்ய என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it