பிரிவினையை தூண்டும் நபர்களுக்கு செம பஞ்ச் கொடுத்த விஜய் ஆண்டனி!

பிரிவினையை தூண்டும் நபர்களுக்கு செம பஞ்ச் கொடுத்த விஜய் ஆண்டனி!

Share it if you like it

பிரபல திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி, பிரிவினைவாதம் பேச கூடிய நபர்களுக்கு புரியும் விதத்தில் சரியான பதிலடியை கொடுத்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் பேச கூடியவர். மேலும், ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்துவதை தனது முழுநேர தொழிலாக கொண்டவர். இதுதவிர, வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் ஏழை வட மாநில தொழிலாளர்கள் மீது வன்மத்தை கக்க கூடியவர். இப்படியாக, சீமானின் அருவருக்கதக்க செயல்கள் இருந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமாக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர், தனது ட்விட்டர் பக்கத்தில், வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர். ANTI BIKILI என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனியின் இந்த கருத்து, சீமான் போன்று பிரிவினை பேசும் நபர்களுக்கு சரியான செருப்படி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it