சாட்டை துரைமுருகன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் : சம்மன் அனுப்பிய என்.ஐ.ஏ !

சாட்டை துரைமுருகன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் : சம்மன் அனுப்பிய என்.ஐ.ஏ !

Share it if you like it

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் 2 இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை மதிவாணன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தென்னகம் விஷ்ணு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாட்டை துரைமுருகன் அவர்களின் மனைவி மாதராசியிடம் சுமார் 3 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி சாட்டை துரைமுருகன் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளது.


Share it if you like it