அப்பாவல் ஆபத்து?: மகள் வெளியிட்ட காணொளி வைரல்!

அப்பாவல் ஆபத்து?: மகள் வெளியிட்ட காணொளி வைரல்!

Share it if you like it

தனக்கோ, தனது கணவருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுதான் காரணம் என அவரது மகள் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி. இவர், சதீஷ்குமார் என்பவரை காதலித்துள்ளார். இவரது, காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கு, முக்கியகாரணம் ’ஜாதி’ என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பினையும் மீறி தனது காதலனை கல்யாணி திருமணம் செய்து கொண்டார். எனினும், அமைச்சர் சேகர்பாபு தனது மகளுக்கும், மருமகனுக்கும் தொடர்ந்து பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தமிழக முதல்வரிடம் சதீஷ்குமார் உயிர் பிச்சை கேட்ட காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், அமைச்சரின் மகள் கல்யாணி வெளியிட்டு இருக்கும் காணொளியில் கூறியதாவது ;

நான் எட்டுமாதம் கர்ப்பமாக இருக்கிறேன். இந்த, காணொளியை டிச., மாதம் பதிவு செய்கிறோம். எனக்கோ, எனது கணவருக்கோ, என் குழந்தைக்கோ? ஏதேனும் ஒன்று நடந்தால் அதற்கு ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இ – 2 காவல் நிலையத்தை சேர்ந்த ஜானி செல்லப்பா, முன்னாள் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தியும் எனது தாய் மாமா சுவராஜ்தான் காரணம் என பேசியுள்ளார். இந்த, காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது பெரியார் மண் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமா, சுந்தரவள்ளி, வைகோ, போன்றவர்கள் தனது உயிருக்கு அஞ்சி காணொளி வெளியிட்ட அமைச்சரின் மகள் கல்யாணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்களா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.


Share it if you like it