விபசார வழக்கில் ரபீக், முகம்மதா கைது!

விபசார வழக்கில் ரபீக், முகம்மதா கைது!

Share it if you like it

சேலம் அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக முகமது ரபீக், அவரது மனைவி முகம்மதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ளது எருமாபாளையம். இப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து சிலர் விபசாரம் நடத்தி வந்திருக்கிறார்கள். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டிற்கு போலீஸார் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் விபசாரம் நடப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்களை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட முகமது ரபிக், அவரது மனைவி முகம்மதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Share it if you like it