கஞ்சா வியாபாரிகளை உஷார் செய்யும் காவல்துறை: செல்வகுமார் குற்றச்சாட்டு!

கஞ்சா வியாபாரிகளை உஷார் செய்யும் காவல்துறை: செல்வகுமார் குற்றச்சாட்டு!

Share it if you like it

2.0 கஞ்சா வேட்டை குறித்து பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார் ஜெ. நியூஸ்க்கு அளித்த பேட்டியில் சரமாரியான கேள்விகளை தமிழக காவல்துறை முன்பு வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றிலேயே கஞ்சா வேட்டையை ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்த போகிறோம் என தமிழக காவல்துறை 10 நாட்களுக்கு முன்பாக சொல்லி விட்டு சென்றால், கஞ்சாவை எப்படி? ஒழிக்க முடியும். இது முட்டாள் தனமான செயல். ஆப்ரேஷன் கஞ்சா, ஒன்றை சரியாக நடத்தி இருந்தால். இரண்டை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.

இந்த தேதியில் நாங்கள் சோதனை செய்வோம் என்று கூறுவது, கஞ்சா வியாபாரிகளை பாதுகாக்கும் செயலாக நான் பார்க்கிறேன். ஆகவே, மேற்கூறிய நாட்களில் நீங்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடாதீர்கள் என்று சொல்வது போல் இது இருக்கிறது. கஞ்சா விற்பனை செய்பவனுக்கு அடிப்படை அறிவு இருக்காதா? என ஜெ. நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சரமாரியான கேள்விகளை காவல்துறையின் முன்பு வைத்து இருக்கிறார் செல்வகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it