கூகுள்_பே, பே_டிஎம் மூலம் நிதி அனுப்புங்க – தொல். திருமாவளவன் !

கூகுள்_பே, பே_டிஎம் மூலம் நிதி அனுப்புங்க – தொல். திருமாவளவன் !

Share it if you like it

சென்னையில் கனமழை பெய்து வருவதால் வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலரும் கடும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கட்சி பணிக்காக அவருடைய கட்சி மக்களிடையே கூகுள் பே, அல்லது போன் பே யில் பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். கனமழையால் மக்கள் அனைவரும் தத்தளித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு உதவி செய்யாமல் அவர்களிடத்தில் உதவியை எதிர்பார்த்து நிற்பது வேடிக்கையாக உள்ளதாகவும், இச்சமயத்தில் தொல்.திருமாவளவன் இதுபோல் கேட்பது நகைப்பிற்குள்ளாக்குகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-

என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் வணக்கம்.

கீழ்க் காணும் ‘ க்யூ ஆர் கோட் ‘ என்னும் குறியீட்டினைப் பயன்படுத்தி கட்சியின் வங்கிக் கணக்கில் நமது கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கும்; திசம்பர் 23 -இல் நடைபெறவுள்ள ‘#வெல்லும்சனநாயகம்மாநாட்டுக்கும் நிதி அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கூகுள்பே, #பேடிஎம், போன்ற செயலிகள் மூலம் இலகுவாக- வங்கிக் கணக்கில் நேரடியாக இயன்ற அளவில் நிதியைச் செலுத்தவும்.

தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக நிதியைச் செலுத்தலாம்.

கட்சியின் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி இயக்கத்தைச் சார்ந்த அனைத்துத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாவரும் தங்களால் இயன்ற நிதியைச் செலுத்திட வேண்டுகிறேன்.இந்த #QR_Code குறியீட்டினை கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் உடனே பகிர்ந்திட வேண்டுகிறேன்.மாநாட்டுக்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் காலம் தாழ்த்தாமல் உரிய காலத்தே மனமுவந்து நன்கொடை அளித்திட வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it