அடுத்தமுறை தி.மு.க. ஆட்சிக்கு வராது – மணி ஆருடம்!

அடுத்தமுறை தி.மு.க. ஆட்சிக்கு வராது – மணி ஆருடம்!

Share it if you like it

தி.மு.க. அடுத்த முறை ஆட்சிக்கு வருவது மிகவும் கடினம் என மூத்த பத்திரிகையாளர் மணி கூறியிருக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

மகளிருக்கு ரூ. 1,000 உரிமை தொகை, சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், பூரண மதுவிலக்கு என பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அள்ளி வீசினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறு, தேனாறு ஓடும் என்பது போல தி.மு.க. எம்.பி. கனிமொழியில் தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை பல்வேறு வாக்குறுதிகளை கூறியிருந்தனர். இதையடுத்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

விடியல் ஆட்சி தமிழகத்தில் அமைந்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால், ஸ்டாலின் அரசு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் இன்று வரை முழுமையாக நிறைவேற்றபடவில்லை. தரமற்ற பொங்கள் பரிசு பொருட்கள், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. அரசு தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன.

இதன்காரணமாக, ஸ்டாலின் மீது தமிழக மக்கள் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். இதனிடையே, கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரும் மூத்த பத்தரிகையாளருமாக இருப்பவர் மணி. இவரது, பேட்டிகள் பெரும்பாலும் மத்திய அரசுக்கு எதிராகவும், தி.மு.க.விற்கு முட்டு கொடுக்கும் வகையில் அமைந்து இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் தான், பத்திரிகையாளர் மணி தி.மு.க.வை மிக கடுமையாக சாடி இருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Share it if you like it