உலகிலேயே அதிகமாக வெறுக்கப்படும் நபராக ஸ்டாலின் இருப்பார்: சாவித்திரி கண்ணன் ‘நச்’!

உலகிலேயே அதிகமாக வெறுக்கப்படும் நபராக ஸ்டாலின் இருப்பார்: சாவித்திரி கண்ணன் ‘நச்’!

Share it if you like it

ஸ்டாலின் ஒரு திராணியற்றவர். அவர் பதவி விலகினால் மட்டுமே தமிழகம் காப்பாற்றப்படும் என்று மூத்த பத்திரிகையாளர் DJசாவித்திரி கண்ணன் அதிரடியாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அறம் என்கிற இணையதள செய்திச் சேனலை நடத்தி வருபவர் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம் உட்பட பல்வேறு செய்திகளின் உண்மைத்தன்மையை துணிச்சலாக வெளியிட்டவர். இவர், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கருணாநிதி வருகையின்போது கருப்புக்கொடி காட்டியதற்காக ஒரு மாணவர் கொல்லப்பட்டார். அம்மாணவரை தனது மகனே இல்லை என்று அவரது தந்தை வாயாலேயே சொல்ல வைத்த அயோக்கியர்தான் கருணாநிதி. அவரது மகனான ஸ்டாலினும் அப்படித்தானே இருப்பார்.

வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த நபர் யார் என்று தெரிந்தும், அவரை கைது செய்ய திராணியற்ற அரசாங்கமாக இருக்கிறது இந்த தி.மு.க. அரசு. விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கூட வக்கற்ற அரசு. ஒரு குண்டூசி அகற்றுவதற்குக் கூட திராணியில்லாத, கோழைத்தனமான, முதுகெலும்பு இல்லாதவர் ஸ்டாலின். ஸ்டாலின் பதவி விலகினால் மட்டுமே தமிழகம் காப்பாற்றப்படும். இந்த ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்குமா என்பது தெரியவில்லை. அப்படி நீடித்தால் உலகத்தில் அதிகமாக வெறுக்கப்படும் நபராக ஸ்டாலின் இருப்பார்” என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it