சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. அவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை வழக்கு பதிவு தாக்கல் செய்தார். ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் மருத்துவ காரணங்களை சொல்லி ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு அவர் சொல்லும் மருத்துவ காரணங்கள் ஏற்க முடியாது என்று கூறி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.