இன்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலை கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
அதில், பொறுப்புள்ள காஷ்மீர் இளைஞர்களால் நாடு பெருமையடைகிறது. காஷ்மீர் பல்கலை கழகத்தின் மாணவ,மாணவிகள் படிப்புடன் சேவையிலும் ஆர்வமுடன் பங்காற்ற வேண்டும். அப்படி செய்தால் சமூக மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று பேசியுள்ளார்.