ஆக்ரா ”சேவாபாரதி” அலுவலகத்தின் மீது கொடூர  தாக்குதல் நிகழ்த்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..!

ஆக்ரா ”சேவாபாரதி” அலுவலகத்தின் மீது கொடூர தாக்குதல் நிகழ்த்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..!

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சேவாராதி அலுவலகத்தை தாக்கிய அடிப்படைவாதிகள்.

உ.பி மாநிலம் ஆக்ராவில் சேவாபாரதி அலுவலக வாசலில் ராதா கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்றைய தினம் சிலர் அக்கோவில் வாசலில் மது அருந்திக் கொண்டும், ஆபாசமாக உரையாடி கொண்டும் இருந்தனர். இங்கு மது அருந்த வேண்டாம் என்று சேவாபாரதி அலுவலத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த சென்ற முஸ்லிம்கள், சில மணி நேரங்கள் கழித்து சுமார் 50 – 60 பேரை திரட்டிக் கொண்டு, சேவாபாரதி அலுவலகத்தின் மீது கல் எறிந்தனர், அதனை தொடர்ந்து அங்கு இருந்த பாரத மாதா சிலையை சேதப்படுத்தினர். மேலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது மிக கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தினர். இந்த கொடூர தாக்குதலில் 13 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகாயமடைந்தனர். அமைதியாக சேவை செய்துக்கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது நடந்த இந்த தாக்குதலை கண்டித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி தொண்டர்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது


Share it if you like it