குழந்தைகள் காப்பகம் மீது பாலியல் புகார்!

குழந்தைகள் காப்பகம் மீது பாலியல் புகார்!

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமாக இருப்பவர் நேதாஜி. இவர், நாகைப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;

நாகப்பட்டினம் நகரம், காடம்பாடி புதிய கடற்கரை சாலையில் இயங்கி வருகிறது ’நம்பிக்கை குழந்தைகள் காப்பகம்’. இங்கு, காப்பகம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதமாற்றம் நடை பெற்று வருகிறது. ஒ.என்.ஜி.சி.யில் பணிபுரிந்து வரும் பரமேஸ்வரன் மற்றும் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்து வரும் சூடாமணி ஆகியோர் மேற்படி தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த காப்பகம், மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் சுமத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தங்க வைக்கப்பட்ட 18- வயத்திற்கு குறைவான பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக பரமேஸ்வரன் தொந்தரவு செய்து இருக்கிறார்.

இதையடுத்து, அந்த தொண்டு நிறுவனத்திலிருந்த பெண் மற்றும் அவரது பெற்றோர்கள் 20 நாட்களுக்கு முன்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்படி பரமேஸ்வரன் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மீது பாலியல் ரீதியான புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகார் கொடுத்த பல நாட்களுக்கு பிறகுதான் கடந்த 23.2.2023 அன்றுதான் காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மேலேட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேற்படி நபரை காவல்துறையினர் கைது செய்யாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

மேற்படி பரமேஸ்வரனுடைய உறவினர்கள் காவல்துறையில் மிக உயரிய பொறுப்பில் இருப்பதாகவும், அவருக்கு வேண்டப்பட்டவர்கள் மிக முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாலும் அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டதாக தெரிய வருகிறது. குழந்தைகள் காப்பாகம் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் தொண்டு நிறுவனங்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it