தொடரும் சோகம் – பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு  தற்கொலை..!

தொடரும் சோகம் – பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை..!

Share it if you like it

சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான கோவை மாணவி பொன்தாரணி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்கள் மனதில் இன்று வரை ஆறாத வடுவினை ஏற்படுத்தி உள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையை அடுத்த உள்ள மாங்காட்டில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் தமிழக மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image
பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே.

  • திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் மரணம்.
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்.
  • கோவையில் காணாமல் போன சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு.
Image
மூன்று மாணவர்களின் உடல்கள்.

என பள்ளி சிறுமிகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்று பலர் கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களிலேயே நான் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் எவ்வாறு? கூற முடிகிறது என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/DonUpdates_in/status/147a2195761739689991?t=Mmc13vl19C9E8DmII6hvVg&s=08

https://twitter.com/draramadoss/status/1472222628744024064

/

Share it if you like it