அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு : போலீசார் விசாரணை !

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு : போலீசார் விசாரணை !

Share it if you like it

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த காரைக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 40 குழந்தைகளை படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கின்ற 6 ஆம் வகுப்பு மாணவியின் சீருடையை கிழித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் பள்ளி தலைமை ஆசிரியர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவி அழுது கொண்டே வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து கிராம மக்கள் தலைமை ஆசிரியரின் செயலை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்து மானாமதுரை காவல்துறை ஆய்வாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் தலைமை ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

https://x.com/NewsTamilTV24x7/status/1768583629062721955?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *