திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி கருவுற்ற சிறுமிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்துள்ளார். அதன்படி, 2021 ஜனவரி மாதம் முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான 34 மாதங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 1,448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,101 பிரசவங்களும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 347 பிரசவங்களும் நடந்துள்ளன.
https://x.com/PoongodiSugandh/status/1757370737843662848?s=20