ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விரதம் இருக்கும் பிரதமர் மோடி !

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விரதம் இருக்கும் பிரதமர் மோடி !

Share it if you like it

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்விற்காக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர். முன்னதாக தன்னார்வலர்கள் ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து ஸ்ரீராம ஜென்மபூமி அட்சதையை வழங்கினர். அதன்பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எடப்பாடி. பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது கோவில் மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராமர் திருமேனியை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யவுள்ள நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறும் 22 ஆம் தேதி முழுவதும் பிரதமர் மோடி விரதம் மேற்கொள்ள உள்ளார். மேலும் சரயு நதிக்கரையில் புனித நீராடிய பிறகே, கும்பாபிஷேகம் நிகழ்வில் பங்கேற்கிறார்.


Share it if you like it