மோடி செய்வதை அன்றே சொன்ன சிங்கப்பூர் மாஜி பிரதமர்: வைரலாகும் வீடியோ!

மோடி செய்வதை அன்றே சொன்ன சிங்கப்பூர் மாஜி பிரதமர்: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

சரியான அரசு மத மாற்றத்தைத் தடுக்கும். போலியான மதச்சார்பற்ற அரசு மத மாற்றத்தை அனுமதிக்கும். இதனால், நாடு பாழகும் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைந்த லீ குவான் யூ பேசியிருக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நவீன சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் லீ குவான் யூ. சிங்கப்பூரை கட்டமைத்தில் இவரது பங்கு அலாதியானது. 30 வருடங்களில் உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும் வகையில், சிங்கப்பூரை உயர்த்திக் காட்டியவர். சிங்கப்பூரை கட்டமைக்க உழைத்தவர்களில் தமிழர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இதனால், சிங்கப்பூரில் தமிழையும் ஆட்சி மொழியாக அறிவித்து, தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்தவர். விமர்சனங்களே இல்லாத அரசியல்வாதிகளே கிடையாது என்பதுபோல இவர் மீதும் சர்வாதிகாரி என்கிற விமர்சனம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தற்போது பாரத பிரதமர் மோடி நாட்டை முன்னேற்ற செயல்படுவதைப்போல, லீயும் சிங்கப்பூரை முன்னேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இவர்தான், மத மாற்றம் தொடர்பாக தற்போது மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, அப்போதே பேசியிருக்கிறார். அக்காணொளியில் பேசும் லீ குவான் யூ, “கிறிஸ்தவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், சிங்கப்பூரை கிறிஸ்தவ நாடாக்க முடியாது. இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற சீனா எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டு கலாசாரத்தை அவர்களால் முழுவதுமாக அழிக்க முடியவில்லை. யானை முகமும், 4 கரங்களையும் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களை பாதுகாத்து, அமைதியை கொடுத்து வரும் விநாயகரை எப்படி நீங்கள் மூடநம்பிக்கை என்று சொல்லலாம். உங்கள் பைபிள்தான் மூடநம்பிக்கை. பிஜி போன்ற நாட்டை முழுவதுமாக கிறிஸ்தவ நாடாக மாற்றி விட்டீர்கள். ஆனால், அங்கிருக்கும் ஹிந்துக்களை உங்களால் மாற்ற முடியவில்லை. கிறிஸ்தவ கூட்டத்திற்கு நான் சொல்வது என்னவென்றால், வாழு வாழ விடு.

நீங்க ரொம்ப நாள் மக்கள ஏமாத்த முடியாது. உங்கள் கதையைக் கேட்டு மதம் மாறியவர்கள், கொஞ்ச நாட்களுக்கு வேண்டுமானால் ஏமாந்திருக்கலாம். நிரந்தரமாக ஏமாற மாட்டார்கள். இதே மாதிரிதான் ஐரோப்பாவை மதம் மாற்றினீர்கள். இன்று நிலைமை என்னவாயிற்று. கிறிஸ்தவத்தை யாரும் மதிக்கவில்லை. சர்ச்கள் எல்லாம் சூதாட்ட கிளப்புகளாகவும், பொழுதுபோக்கும் இடங்களாகவும் மாறிவிட்டன. இப்போது சிங்கப்பூரிலும் மதம் மாற்ற முயற்சி செய்கிறீர்கள். சரியான அரசு மதமாற்றத்தை தடுக்கும். போலியான மதச்சார்பற்ற அரசு இதை அனுமதிக்கும். இதனால் நாடு பாழாகும்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டவர நடவடிக்கை எடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசை பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it