இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றி அழைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி ) சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக “பாரத்” என்று மாற்ற பரிந்துரை வழங்கி உள்ளது.
சி.பி.எஸ்.சி பாட புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற (என்.சி.இ.ஆர்.டி ) குழுவானது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.