பனை மரத்தின் சிறப்புகள் பற்றி முதியவர் ஒருவர் பேசிய காணொளி வைரல்.
தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்து உள்ள மரங்களில் பனை மரமும் ஒன்று, ஹிந்து மதத்தில் பனை மரத்தை இன்று வரை தெய்வமாக வழிபடும் கோவில்களும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. நமது முன்னோர்கள் பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்றே அழைத்தனர். தமிழர்களின் உணவிலும், உணர்விலும், கூட பனை மரம் இணைந்தே உள்ளது. இந்த நிலையில் பனை மரத்தின் சிறப்புகள் குறித்து முதியவர் ஒருவர் பேசிய காணொளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் அக்காணொளி வைரலாகி வருகிறது.