இலங்கை தமிழ் MP முன்வைத்த கடும் விமர்சனத்தை தனக்கு சாதகமாக மாற்றி தம்பிகளிடம் கைத்தட்டு வாங்கிய சீமான்..!

இலங்கை தமிழ் MP முன்வைத்த கடும் விமர்சனத்தை தனக்கு சாதகமாக மாற்றி தம்பிகளிடம் கைத்தட்டு வாங்கிய சீமான்..!

Share it if you like it

ஆமைக்கறி, பூனைக்கறி, என்று தமிழக மக்களை சீமான் ஏமாற்றி வருவதாக இலங்கை MP சீமானுக்கு கண்டனம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதையை கேட்டு தமிழக மக்கள் சிரிப்பது ஒருபுறம் என்றால், சாட்டை துரைமுருகன், இடும்பவனம் போன்ற தம்பிகள் அதற்கு விளக்கம் கொடுக்க முற்படுவது இன்று வரை வாடிக்கையாக இருந்து வரும் சமயத்தில். இலங்கை வாழ் தமிழ் MP ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆமைக்கறி, பூனைக்கறி, என்று பேசி தமிழக மக்களை சீமான் ஏமாற்றி வருவதாக தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் எம்பி ஒருவர் சீமானின் போலி சுயரூபத்தை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டி பேசியுள்ளார். தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்ள வேண்டிய சீமான், இலங்கை நாடாளுமன்றத்தில் என்னை பற்றி பேசுகிறார்கள் என்று பெருமையாக பேசி தனது தம்பிகளிடம் கைதட்டு வாங்கிய சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it