இலங்கையை காப்பாற்றிய நாடு இந்தியா தான் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடு இலங்கை. இந்நாடு, மிக கடுமையாக பொருளாதார நெருக்கடியில் அண்மையில் சிக்கி தவித்து வந்தன. இப்படிப்பட்ட சூழலில், சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தன. இந்த நிலையில் தான், இலங்கையின் சூழ்நிலையை உணர்ந்து பல்வேறு உதவிகளை இந்தியா செய்தது.
அந்த வகையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தக்க சமயத்தில் இந்தியா செய்த உதவிகளை நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.