திருவிழாவில் கத்திக்குத்து : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசு !

திருவிழாவில் கத்திக்குத்து : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசு !

Share it if you like it

மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.

இதில் மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (வயது 28) ஆகியோரும் கலந்துகொண்டனர். நண்பர்களான இவர்கள் இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனை சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சக்கணக்கான மக்கள் கூடும் திருவிழாவில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது. இந்த அடிப்படை அறிவுகூட திமுக அரசுக்கு இருக்காதா ? காவல் துறையினர் திமுகவினருக்கு மட்டும் கைப்பாவையாக செயல்பட கூடாது என்று சமூக வலைத்தளங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *