விருது வாங்கிய படத்திற்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்..! வழக்கம் போல கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

விருது வாங்கிய படத்திற்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்..! வழக்கம் போல கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அசுரன் படம் பார்த்து விட்டு. தனது கருத்தை  வெளியிட்டு இருந்தார். அதனை அடுத்து முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம், குறித்த மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. அதற்குரிய ஆதாரத்தை வழங்காமல், இன்று வரை திமுக தலைமை தொடர்ந்து, கள்ள மெளனம் காத்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஆதித்தமிழர் மக்கள் கட்சி, மூலபத்திரத்தின் நகலை கண்டுபிடித்து, கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். என்று அண்மையில் அறிவித்து இருந்தது. பா.ஜ.க தலைவர் எல். முருகன் அவர்கள் கூட முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தில் நான் அவதூறு பரப்புவதாக நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார். மூலப்பத்திரத்தை வெளியிடுவதில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? என்று வெளிப்படையாகவே தனது கருத்தை கூறியிருந்தார்.

இந்நிலையில் தனுஷ் நடித்த அசுரன் படத்திற்கு மத்திய அரசு நேற்றைய தினம் தேசிய விருதை அறிவித்தது. ஆனால் இன்று வரை ஸ்டாலின் மூலப்பத்திரம் குறித்து இதுவரை எந்த கருத்தினை கூறாமல். நீண்ட மெளனம் காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் வழக்கம் போல ஸ்டாலினை கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it