நெறியாளரை அசால்ட்டாக பங்கம் செய்த சூர்யா!

நெறியாளரை அசால்ட்டாக பங்கம் செய்த சூர்யா!

Share it if you like it

நெறியாளரை பா.ஜ.க ஓ.பி.சி மாநில பொதுச் செயலாளர் பங்கம் செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அனைத்தும் தி.மு.க-வின் ஆசி பெற்றவை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். அந்தவகையில், சத்தியம் டிவியின் நெறியாளராக இருப்பவர் முக்தார் அஹமத். இவர், பா.ஜ.க தலைவர்களிடம் நேர்காணல் செய்யும் பொழுது ஆத்திரமூட்டும் வகையிலும் அவமதிக்கும் நோக்கிலும் இவரது கேள்விகள் அமைந்து இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பா.ஜ.க-வின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான ராதா ரவியிடம் சமீபத்தில் நெறியாளர் முக்தார் அஹமத் பேட்டி கண்டு வாங்கி கட்டிக் கொண்ட சம்பவத்தை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. அது குறித்தான வீடியோ லிங்க் இதோ.

அந்தவகையில், பா.ஜ.க ஓ.பி.சி மாநில பொதுச் செயலாளராக இருக்கும் திருச்சி சூர்யாவிடம் நெறியாளர் முக்தார் அஹமத் பேட்டி கண்டு இருக்கிறார். அப்பொழுது, வழக்கம் போல எடுக்கு மடக்கான கேள்விகளை நெறியாளர் எழுப்பி இருந்தார். இதையடுத்து, முக்தாரின் கேள்விகள் மூலம் அவரது உண்மையான சுயரூபத்தை சூர்யா புரிந்து கொண்டார். அந்தவகையில், நெறியாளரை இரக்கமே இல்லாமல் பா.ஜ.க தலைவர் பங்கம் செய்து இருக்கும் காணொளி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கூடுதல் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it