வந்தே பாரத் ரயிலின் மீது கல் எரிந்து தாக்குதல் – இந்து முன்னணி கண்டனம் !

வந்தே பாரத் ரயிலின் மீது கல் எரிந்து தாக்குதல் – இந்து முன்னணி கண்டனம் !

Share it if you like it

வந்தே பாரத் ரயில் மீது கல்லெரிந்து தாக்குதலில் ஈடுபடும் நபர்களை அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :

பாரத தேசத்தின் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றான வந்தே பாரத் ரயில் திட்டம் மிகவும் சிறப்பானது.

பாரத தேசத்தின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிக்கு வந்தே பாரத் ரயில் வராதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில்..!!

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகில் வந்தே பாரத் ரயிலின் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பல நடந்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறது.

தமிழக அரசின் இந்த மௌனம் தமிழக மக்களுக்கு வந்தே பாரத் போன்ற சிறப்பு மிக்க திட்டம் கிடைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறதோ.! என்று நினைக்கத் தோன்றுகிறது..!
பாரத தேசத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வரப்பிரசாதமாக வரவேற்கும் வந்தே பாரத் ரயிலை தமிழகம் மற்றும் கேரளாவில் மற்றும் கல் வீசி தாக்குதல் நடத்துவது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.


Share it if you like it