பேருந்துகள் நிறுத்தம் : மக்கள் அவதி : நடவடிக்கை எடுக்கப்படுமா ?

பேருந்துகள் நிறுத்தம் : மக்கள் அவதி : நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Share it if you like it

அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன.

இதுதொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்றும் பேச்சுவார்ததை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே இன்று ( 9-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் இருந்தே பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. அதேபோல் இன்று காலை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணிகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Share it if you like it