கடும் நடவடிக்கைகள் எடுத்து அறத்தை நிலைநிறுத்த வேண்டும் – இந்துமுன்னணி !

கடும் நடவடிக்கைகள் எடுத்து அறத்தை நிலைநிறுத்த வேண்டும் – இந்துமுன்னணி !

Share it if you like it

கோவிலில் பக்தர்கள் முன் குத்தாட்டம் போட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தர்மகர்த்தா மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலயத்தில் அத்துமீறல்கள், அராஜகங்கள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன. அதில் ஒருபடி மேலே போய் திருவேற்காடு கோவில் அம்மன் முன் கோவில் தர்மகர்த்தா தூண்டுதலில், கோவில் ஊழியர்கள் குத்தாட்டம் போட்டது பக்தர்கள் மனதை புண்படுத்தியுள்ளது.

‘கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜங்கு ஜங்குன்னு ஆடுச்சாம் என்பது போல, கோவிலுக்கு மன நிம்மதி தேடி வரும் பக்தர் முன் குத்தாட்டம் போட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தர்மகர்த்தா மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து அறத்தை நிலைநிறுத்த வேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது.


Share it if you like it