மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவன் ஒருவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ளது சூரங்குடி கிராமம். இங்குள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் தான் ஷேக் முகம்மது. இவர், ஒரு பாடத்திற்கான நோட்டு புத்தகத்தை கொண்டு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், கடும் கோவம் அடைந்த ஆசிரியர் மாணவனை சரமாரியாக பிரம்பால் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

இதையடுத்து, அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுவன். தனக்கு, நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி இருக்கிறார். அந்த வகையில், ஷேக் முகமதுவின் உடலில் ஏற்பட்ட காயங்களை அவரது பெற்றோர் வீடியோவாக பதிவு செய்து இருக்கின்றனர். இக்காணொளி, தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it