அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவு !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவு !

Share it if you like it

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேட்டில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச்- 21 ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் பல முறை ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடினார். ஆனால் பலமுறை நிராகரிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி என கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் வரும் ஜூன் 1 ம் தேதி வரை ஜாமினில் விட உத்தரவிட்டனர். டில்லியில் வரும் 25 ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அவர் லோக்சபா தேர்தல் பிராசரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் பிரசாரம் சூடு பிடிக்கும். ஜூன் 2ம் தேதி மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்.

ஜாமின் நகல், சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு ஓரிரு நாளில் கெஜ்ரிவால் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *