லூர்து பிரான்சிஸ் படுகொலை: சுற்றுச்சூழல் போராளி எங்கே?

லூர்து பிரான்சிஸ் படுகொலை: சுற்றுச்சூழல் போராளி எங்கே?

Share it if you like it

வி.ஏ.ஓ. லூர்தூ பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து இன்றுவரை ஏன் அறிக்கை வெளியிடவில்லை என சுற்றுச்சூழல் போராளி சூர்யாவை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே வி.ஏ.ஓ. லூர்தூ பிரான்சிஸ் என்பவர் அண்மையில் சமூக விரோதிகளால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது, படுகொலை தமிழகத்தையே உலுக்கியது. இப்படிப்பட்ட சூழலில், தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும், தற்காப்பு பயிற்சி அளித்து கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை கண்டித்து உடனே அறிக்கை வெளியிடுபவர் நடிகர் சூர்யா. இவர்தான், இன்று வரை லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மெளனமாக இருந்து வருகிறார். விடியல் ஆட்சி என்பதால் இந்த மெளனமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it