ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர் சுவாமி சகஜானந்தா !

ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர் சுவாமி சகஜானந்தா !

Share it if you like it

தலைசிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த சுவாமி சகஜானந்தா அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அடித்தட்டு மக்கள், கல்வியால் மட்டுமே உயர முடியும் என கல்வி நிறுவனங்களை நிறுவி பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி, எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய சுவாமி சகஜானந்தா அவர்கள் பிறந்த தினம் இன்று.

சுவாமி சகஜானந்தா அவர்கள் நிறுவிய நந்தனார் கல்விக் கழகம் இன்று ஆல் போல் பல்கிப் பெருகி, பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. தலைசிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த சுவாமி சகஜானந்தா அவர்கள், அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர். 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்தவர்.

சுவாமி சகஜானந்தா பிறந்த தினமான இன்று, அவரது கல்விப் பணிகளும், சமூகப் பணிகளையும் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.


Share it if you like it