வளர்ப்பு மகளின் கருமுட்டை விற்பனை: சையத் அலி கைது!

வளர்ப்பு மகளின் கருமுட்டை விற்பனை: சையத் அலி கைது!

Share it if you like it

வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சையத் அலி, அச்சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்து காசு பார்த்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி இந்திராணி. இத்தம்பதிக்கு ஒரே மகள். இவருக்கு 4 வயது இருக்கும்போது, திடீரென சரவணன் உயிரிழந்து விட்டார். இதையடுத்து, சையத் அலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இந்திராணி. இந்த சூழலில், சிறுமிக்கு 12 வயது பூர்த்தியடைந்த நிலையில் பருவமடைந்திருக்கிறார். இதையடுத்து, வளர்ப்புத் தந்தையான சையத் அலி, சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், சையத் அலியின் வற்புறுத்தலின் பேரில், ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மகளின் கருமுட்டையை 20,000 ரூபாய் என்கிற அடிப்படையில் தொடர்ந்து விற்பனை செய்து வந்திருக்கிறார் இந்திராணி.

இதேபோல, பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும் 8 முறைக்கும் மேல் சிறுமியின் கருமுட்டைகளை விற்றிருக்கிறார்கள் சையத் அலியும், இந்திராணியும். சிறுமியின் கருமுட்டைகள் என்று கூறினால் சிக்கலாகிவிடும் என்பதால், 22 வயதுடைய பெண் என்று இச்சிறுமியை கூறி வந்திருக்கிறார்கள். மேலும், கரு முட்டை விற்பனை செய்வதற்காக, அச்சிறுமிக்கு பானு என்று பெயர் மாற்றி மகாலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்ததாக போலியான திருமணச் சான்றை தயார் செய்திருக்கிறார்கள். இப்படி, கருமுட்டைகளை விற்பனை செய்வதற்கு, அதேபகுதியைச் சேர்ந்த மாலதி என்கிற பெண் இடைத்தரகராக செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த விவகாரம்தான் தற்போது வெளிச்சத்துக்கு வந்து தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்திராணி, சையத் அலி மற்றும் மாலதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பேசிய காணொளியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் லிங்க் இதோ.


Share it if you like it