அண்ணாமலையை சமாளிக்க முடியாமல் தி.மு.க. திணறுகிறது – தடா ரஹிம்!

அண்ணாமலையை சமாளிக்க முடியாமல் தி.மு.க. திணறுகிறது – தடா ரஹிம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை தி.மு.க. சமாளிக்க முடியாமல் திணறி வருவதாக தடா ரஹிம் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தடா ரஹிம் பிரபல யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சமாளிக்க தி.மு.க.வால் முடியவில்லை. அ.தி.மு.க.வை விடுங்க, அண்ணாமலையை தி.மு.க.வால் எதிர்க்க முடியவில்லை. அதனை, அவர்களே வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகனே வெளிப்படையாக பேசியிருக்கிறார். அனைத்து ஊடகங்களும் அண்ணாமலைக்கு தான் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றன. அரசியல் ரீதியாக அண்ணாமலைக்கு பதில் சொல்ல தி.மு.க.வில் ஆள் இல்லை. சைதை சாதிக் நடிகை குஷ்பு குறித்து ( ஆபாசமாக ) கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து, மிகப்பெரிய அளவில் பெண்களை திரட்டி அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அதற்கு, பதிலடி கொடுக்க கூட தி.மு.க.வால் முடியவில்லையே என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it