தி.மு.க. அமைச்சர்கள் சம்பாரிக்கும் பணம் உள்நாடு, வெளி நாடுகளுக்கு ஹவாலா முறையில் கடத்தப்படுகிறது என தடா ரஹீம் பகீர் தகவலை கூறியிருக்கிறார்
இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருப்பவர் தடா ரஹீம். இவர், அண்மையில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் : இந்த இஸ்லாமிய தலைவர்கள் தி.மு.க., அ.தி.மு.க. உடன் சேர்ந்து கொண்டு ஹவாலா தொழில் செய்கிறார்கள். நான் அடித்து சொல்கிறேன். ஆளும் கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அடிக்கும் பணம் அனைத்தும் முஸ்லீம் சமுதாய தலைவர்கள் மூலம் உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் செல்கிறது.
இது அனைத்தும் நேரடியாக நான் என் காதால் கேட்டவை. யாரோ சொல்லியது கிடையாது. இது, அனைத்தும் எனது நம்பிக்கைக்குறியவர்கள் சொன்னது என திடுக்கிடும் தகவலை தடா ரஹீம் தெரிவித்து இருக்கிறார்.