கேரளாவுக்கு சீதனம் அனுப்பும் தாலிபான்கள் – சிக்கலில் கம்யூனிஸ்டுகள்

கேரளாவுக்கு சீதனம் அனுப்பும் தாலிபான்கள் – சிக்கலில் கம்யூனிஸ்டுகள்

Share it if you like it

கடந்த 2016 ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த 25 பேர் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக ஆப்கன்., சென்றிருந்தனர். அப்போது அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது இந்நிலையில் ஆப்கன் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் சிறையில் இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக விடுவித்துள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த 25 பெரும் அடக்கம். இவர்கள் விடுதலை ஆகி இந்தியா வரும் பட்சத்தில் உள்நாட்டில் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டு அரசு மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலை இவ்விவகாரம் அக்கட்சிக்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it