தலைமை காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு மீது பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு.
திமுக-விற்கு ஓட்டு போடாத மக்கள் மீது தாக்குதல், பா.ஜ.க நிர்வாகிகள் மீது தி.மு.க-வினர் தாக்குதல், பொதுமக்கள் மீது தாக்குதல் என சட்டம், ஒழுங்கு, தமிழகத்தில் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருதை ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தி.மு.க அரசு மீதும், தமிழக காவல்துறை டிஜிபி மீதும் மிக கடுமையான குற்றச்சாட்டை சுமத்தி பேசிய காணொளி வைரலாகி வருகிறது.
- பாரதப் பிரதமர் மோடி அவர்களை கொலைகாரன் என்று கூறிய விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்காமல் மெளனம்.
- வன்னியரசு மீது காவல்துறையில் பா.ஜ.க நிர்வாகிகள் புகார் மனு கொடுத்த பின்பும் மெளனம்.
- பா.ஜ.க பெண் நிர்வாகி காயத்திரி ரகுராம் அவர்களை கீழ்த்தராமக விமர்சனம் செய்த தி.மு.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறைமெளனம்.