பகவதியின் பக்தையாக கேட்கிறேன் – மேதகு ஆளுநர் தமிழிசை உருக்கமான டுவிட்

பகவதியின் பக்தையாக கேட்கிறேன் – மேதகு ஆளுநர் தமிழிசை உருக்கமான டுவிட்

Share it if you like it

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் ஏற்பட்ட தீவிபத்தால் கோவில் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து பாஜக மாநிலத்தலைவர் திரு எல்.முருகன் நேரில் பார்வையிட்டார், அத்தொகுதி பாஜக எம்.எல்.ஏ திரு எம். ஆர். காந்தி நேரில் ஆய்வு செய்தார் இதன் பின்னர் ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தினை ஆய்வு செய்தார் இந்நிலையில் மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சேகர் பாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயிலை விரைந்து சீரமைக்குமாறு கேட்டுக்கொண்டதாக

“மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் பக்தை என்ற முறையில் மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.அமைச்சரும் ஆவண செய்வதாக உறுதியளித்தார்” மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it