விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு வாழ்நாள் சிறை வழங்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் ஜோசப் ராஜா – 49. இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு சர்ச்சில் பிராத்தனை முடிந்த பின் தனியாக இருந்த மனநலம் குன்றிய 17 – வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். சிறுமியின் தாயார் அளித்த புகார் அடிப்படையில், ராஜபாளையம் மகளிர் காவல்துறையினர் பாதிரியாரை போக்சோவில் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஜோசப் ராஜாவிற்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஒரு லட்சமும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான, செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தினமலர் வெளியிட்டுள்ளது.