டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் ஜி.20 மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி டெல்லி நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. மேலும் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டு டெல்லியை போலீசார் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் வரும் 9-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சார்பில் அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்கிறார், இதற்காக அவர் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார்.குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.