பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதை… தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலனின் தில்லாலங்கடி அம்பலம்!

பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதை… தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலனின் தில்லாலங்கடி அம்பலம்!

Share it if you like it

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை தி.மு.க.வினர் அடிக்கப் பாய்ந்ததற்கு காரணம் அக்கட்சியின் எம்.எல்.ஏ. எழிலன்தான் என்பது வீடியோ மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

நியூஸ் 18 என்கிற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தமிழ்நாட்டுக்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா? என்கிற தலைப்பில் மக்கள் சபை நிகழ்ச்சியை சென்னை தியாகராயர் நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையிலுள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடத்தியது. இதில், திராவிட மாடல் என்கிற தலைப்பில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. எழிலன், கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பேசினர். அதேபோல, தேசிய மாடல் என்கிற தலைப்பில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் இரா.ஸ்ரீநிவாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பேசினர்.

இந்நிழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில், தி.மு.க.வையும், திராவிட மாடலையும் கடுமையாவே சாடினார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் இருக்கையை விட்டு எழுந்து வந்து, மேடைக்கு முன்பாக நின்று கொண்டு கிருஷ்ணசாமியை எதிர்த்து கோஷமிட்டனர். மேலும், கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை பேச விடாமல் தடுத்ததோடு, அடிக்கவும் பாய்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தி.மு.க.வினரை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இதன் பிறகு, வி.சி.க. தலைவர் திருமாவளவனும், தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலனும் தலையிட்டு தி.மு.க.வினரை அமைதிப்படுத்தினர். இதனால், டாக்டர்.கிருஷ்ணசாமியின் பேச்சு தடைபட்டது. மேலும், திருமாவளவனையும், எழிலனையும் எல்லோரும் பாராட்டினர்.

ஆனால், தி.மு.க.வினரை தூண்டி விட்டதே தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன்தான் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, மக்கள் சபை நிகழ்ச்சி நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது எப்படியோ மக்கள் மத்தியில் லீக்காகி விட்டது. அந்த வீடியோவில் டாக்டர்.கிருஷ்ணசாமி தி.மு.க.வையும், திராவிட மாடலையும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருக்கும்போது, எம்.எல்.ஏ. எழிலன் கைகளால் சைகை காட்டி கிருஷ்ணசாமிக்கு எதிராக தி.மு.க.வினரை தூண்டிவிடும் காட்சிகள் அப்பட்டமாகத் தெரிகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் கதையாக இருக்கிறது. ஓகோ, இதுதான் திராவிட மாடல் போல… என்று கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும், தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலனின் இத்தகைய இழிசெயல் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

மக்கள் மைன்ட் வாய்ஸ்: இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க!


Share it if you like it