தி.மு.க. எம்.பி.க்கள் ‘முட்டை போண்டா’ சாப்பிடத்தான் லாயக்கு: அரசியல் பார்வையாளர் ஸ்ரீராம் ‘அட்டாக்’!

தி.மு.க. எம்.பி.க்கள் ‘முட்டை போண்டா’ சாப்பிடத்தான் லாயக்கு: அரசியல் பார்வையாளர் ஸ்ரீராம் ‘அட்டாக்’!

Share it if you like it

தமிழக எம்.பி.க்கள் முட்டை போண்டா சாப்பிடுவதற்காக மட்டுமே நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்களே தவிர, வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவருவதற்கு அல்ல என்று அரசியல் பார்வையாளர் ஜெ.வி.சி.ஸ்ரீராம் கடுமையாக சாடி இருக்கிறார்.

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் பார்வையாளர் மற்றும் விமர்சகராக திகழ்பவர்களில் ஒருவர் ஜெ.வி.சி.ஸ்ரீராம். இவர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, தமிழக எம்.பி.க்கள் அரசியல் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர, தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளில் துளியும் அக்கறைகாட்டுவதில்லை. கர்நாடகாவைச் சேர்ந்த இளவயது எம்.பி. தேஜஸ்வி சூர்யாவால் இன்று, அம்மாநிலத்தில் ஏர்போர்ட் இல்லாத ஊர்களே இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல, மைசூரு எம்.பி.யின் இடைவிடாத முயற்சியால் இன்று பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள், குறிப்பாக தர்மபுரி செந்தில்குமார் போன்றவர்கள் முட்டை போட்டா சாப்பிடுவதற்காக மட்டுமே நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்கள். ஜல்ஜீவன் திட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிறைவடைந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யின் தொகுதியான நாகப்பட்டினத்தில் வெறும் 9 சதவிகிதம்தான் நிறைவடைந்திருக்கிறது.

நமக்குத் தேவை தமிழகத்திற்கு வளர்ச்சிப் பணிகளை அள்ளிக் கொண்டு வரக்கூடிய எம்.பி.க்கள்தானே தவிர, வெறும் அரசியல் செய்யும் எம்.பி.க்கள் அல்ல என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும், ஜெ.வி.சி.ஸ்ரீராமின் கருத்தை ஆமோதித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஸ்ரீராம் இன்னும் என்னவெல்லாம் பேசினார் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…


Share it if you like it