தமிழ் மொழியின் மேன்மை… குஜராத்தில் முழங்கிய ஆளுநர்!

தமிழ் மொழியின் மேன்மை… குஜராத்தில் முழங்கிய ஆளுநர்!

Share it if you like it

தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து குஜராத் மாநிலத்தில் தமிழக ஆளுநர் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக கவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவர், அண்மையில் குஜராத் மாநிலம் சென்று இருந்தார். அப்போது, ராஜ்கோட்டில் மாணவர்களிடையே உரையாற்றும் போது இவ்வாறு பேசினார் ; நம்மிடையே தமிழ்நாடு மாணவர்களும் உள்ளனர். உங்களுக்கு தெரிந்திருக்கும், தமிழ் மொழிதான் உலகின் பழமையான மற்றும் செழுமையான மொழி. பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் இலக்கியங்கள் நம்மிடம் உள்ளன. இந்த நாட்டில் அனைவரும் பெருமை கொள்வோம். தமிழ் மொழியின் செழுமைக்காக இந்தியா பெருமை கொள்கிறது. தமிழ் அறிஞர்கள், தமிழ் புலவர்கள், தமிழ் மொழியாளர்கள் தங்கள் பாரம்பரியத்தை நம்மிடம், நமக்காக விட்டு சென்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it