‘அணில்’ அமைச்சருக்கு இப்படியொரு அசிங்கமா..?!

‘அணில்’ அமைச்சருக்கு இப்படியொரு அசிங்கமா..?!

Share it if you like it

மின் தடைக்கு அணில்கள்தான் காரணம் என்று சொன்ன மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கலாய்த்து சிறுமி வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த மீண்டும் மின்தடை ஆரம்பமானது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கரன்ட் கம்பிகளில் அணில்கள் சடுகுடு ஆடுகின்றன. இதுதான் மின்தடை ஏற்படக் காரணம் என்று பதில் கூறியிருந்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், தற்போது மின்தடை மிகத்தீவிரமாக இருக்கிறது. நகர்ப் பகுதிகளில் 3 மணி நேரம் வரை நீடிக்கும் மின்தடை, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் 10 மணி நேரம் வரை நீடிக்கிறது. இந்த மின்தடைக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய மின்தொகுப்பு வரவில்லை என்றும், நிலக்கரி தட்டுப்பாடு என்றும் பதில் கூறியிருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

ஆனால், மத்திய அரசோ, 2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாகச் சொல்லி அமைச்சரின் மூக்கை உடைத்து விட்டது. இதன் பிறகு, மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இனி மின்தடை இருக்காது என்று கூறினார் செந்தில்பாலாஜி. ஆனால், இன்றுவரை மின்தடை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, கிராமப்புறங்கள் மின்தடை அதிக அளவில் இருப்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில்தான், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கிண்டல் செய்யும் விதமாக, ஒரு சிறுமி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு அணில் குட்டியை கையில் வைத்திருக்கும் சிறுமி, “என் செல்லக்குட்டி, பட்டுக்குட்டி. ஏன் இது மாதிரி எல்லாம் பண்ற. இனிமே வயர்ல எல்லாம் போயி ஏறாத. உன்னையால அடிக்கடி கரன்ட் கட்டாகுது. அப்புறம் அக்கா படிக்கணும். நீ கரன்ட்ட அடிக்கடி கட் பண்றன்னு டி.வி.யில எல்லாம் நியூஸ் போடுறாங்க. அப்புறம் உன்னைய போலீஸ் புடிச்சுக்கிட்டுப் போயிரும். அப்புறம் அக்கா உன்னைய தேடிக்கிட்டே இருப்பாங்க. அதுனாளல இனிமேலு அப்புடியெல்லாம் பண்ணாத” என்று சொல்கிறார். அத்துடன் வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it