தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’யை மிஞ்சிய சம்பவம்!

தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’யை மிஞ்சிய சம்பவம்!

Share it if you like it

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கேரளா ஸ்டோரி போல் தமிழகத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் இன்று காலை முதல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் இளம்பெண், “எனது பெயர் செல்வி. நான் பிளஸ் டூ படித்திருக்கிறேன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இம்ரான் என்கிற முஸ்லீம் பையன் அறிமுகமானான். இருவருக்கும் நெருங்கிய பழக்கமெல்லாம் இல்லை. பார்த்தால் ஹாய் சொல்லிக் கொள்வோம், அவ்வளவுதான். திடீரென ஒருநாள் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டார். நான் யோசித்து சொல்கிறேன் என்று கூறினேன்.

ஆனால், எனது சம்மதம் இல்லாமலும், எனது பெற்றோரிடம் எதுவும் கேட்காமலும், இம்ரான் வீட்டில் எங்களது திருமண பத்திரிகையை அச்சடித்திருக்கிறார்கள். அதோடு, செல்வி என்கிற எனது பெயரை அஸ்மா பாத்திமா என்றும் மாற்றி இருக்கிறார்கள். இந்த திருமணத்தில் எனக்கு துளியும் இஷ்டம் இல்லை. மேலும், செல்வி என்கிற எனது பெயருக்குரிய அடையாளத்தை நான் இழக்க விரும்பவில்லை. ஆகவே, இந்த கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி கேரளா ஸ்டோரி படத்தில் ஹிந்து பெண்களை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி திருமணம் செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அடிமைகளாக அனுப்பப்படுவதுபோல காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில், ஹிந்து பெண்ணின் சம்மதமே இல்லாமல், திருமண பத்திரிகையை அச்சடித்து, கட்டாய திருமணத்துக்கு முயன்றிருக்கிறது ஒரு இஸ்லாமிய குடும்பம். இதுவும் ஒருவகை லவ்ஜிகாத்தானோ…


Share it if you like it