சாராய வியாபாரி குறித்து போலீஸுக்கு தகவல்… கொத்தனார் சரமாரி வெட்டிக்கொலை!

சாராய வியாபாரி குறித்து போலீஸுக்கு தகவல்… கொத்தனார் சரமாரி வெட்டிக்கொலை!

Share it if you like it

சாராய வியாபாரி குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்த கொத்தனார் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பச்சன் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் தனபால். கொத்தனார் வேலை செய்து வந்த இவர், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் சிறிது நேரம் மெயின் ரோட்டில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளின் வந்த 3 மர்ம நபர்கள், திடீரென தனபாலை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து ஓடிவந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த தனபாலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே தனபால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். சாராய வியாபாரி குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்ததால்தான் தனபால் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து திருநீலக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Share it if you like it