கரூர் சரக்கு படுத்தும்பாடு… பாம்பாக மாறிய குடிமகன்… தலைதெறிக்க ஓடிய போலீஸ்… வைரலாகும் வீடியோ!

கரூர் சரக்கு படுத்தும்பாடு… பாம்பாக மாறிய குடிமகன்… தலைதெறிக்க ஓடிய போலீஸ்… வைரலாகும் வீடியோ!

Share it if you like it

குடிமகன் ஒருவர், மூச்சு முட்ட சரக்கை குடித்து விட்டு, பாம்புபோல ஊர்ந்து வந்து, போலீஸ்காரரின் காலை கடித்ததால், அந்த போலீஸ்காரர் தலைதெறிக்க ஓடிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று காலை முதல் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குடிமகன் ஒருவர் ஃபுல் மப்பில் இருக்கிறார். அவரை போலீஸ்காரர் ஒருவர் பிடித்து அபராதம் விதிக்க முயன்றிருக்கிறார். ஆனால், போதையில் தடுமாறி கீழே விழுந்த அந்த குடிமகன், பாம்பு போல வளைந்து நெளிந்து ஊர்ந்து வந்து, பைக்கில் நின்று கொண்டிருந்த அந்த போலீஸ்காரரின் காலை கடிக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ்காரர் பைக்கை அப்படியே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுகிறார்.

ஆனாலும், அந்தக் குடிமகன் அந்த போலீஸ்காரரை வீடுவதுபோல இல்லை. மீண்டும் பாம்பு போல ஊர்ந்தபடியை அந்த போலீஸ்காரரை நோக்கி நகர்ந்து செல்கிறார். அந்த போலீஸ்காரரோ விட்டால் போதுமுடா சாமி என்பதுபோல தெறித்து ஓடுகிறார். இதனிடைய மற்றொரு நபர் அந்தப் பக்கமாக வரவே, அவரை நோக்கி பாம்பு போல ஊர்ந்து செல்கிறார் அந்தக் குடிமகன். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் வயிறு வலிக்க சிரித்து வருகிறார்கள்.

அதேசமயம், நெட்டிசன்களோ, கரூர் சரக்கை அடித்துவிட்டு, பாம்பாக மாறிய குடிமகன் என்றும், அடேய், அப்படி என்ன சரக்குதான்டா அடிச்சே… போலீஸ்காரரே பயந்து ஓடுறாரு என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜி சொந்தமாக சரக்கு தயாரித்து டாஸ்மாக் கடைகளில் திருட்டுத்தனமாக விற்பதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it