கற்பிப்போரை கைது செய்த காவல்துறை  ?

கற்பிப்போரை கைது செய்த காவல்துறை ?

Share it if you like it

கடந்த ஒரு வாரமாக சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு முழுநேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆசிரியர்களின் கோரிக்கைகள அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை முடித்து பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது காவல்துறை.


Share it if you like it