ஹிந்து மதத்திற்கு மாறிய வாசிம் ரிஸ்வியின் தலையை துண்டிப்பவர்களுக்கு 25 லட்சம் பரிசு..! தெலுங்கானா காங்., தலைவர் ரஷீத் கான் சர்ச்சை பேச்சு..!

ஹிந்து மதத்திற்கு மாறிய வாசிம் ரிஸ்வியின் தலையை துண்டிப்பவர்களுக்கு 25 லட்சம் பரிசு..! தெலுங்கானா காங்., தலைவர் ரஷீத் கான் சர்ச்சை பேச்சு..!

Share it if you like it

தாய்மதம் திரும்பிய ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்விக்கு கொலை மிரட்டல்.

ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி ஹிந்து மதத்தின் மீது ஏற்பட்ட ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக சமீபத்தில் தாய் மதத்திற்கு திரும்பினார். இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உட்பட பலர் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதனை எல்லாம் வாசிம் பொருட்படுத்தாமல் தனது கொள்கையில் உறுதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ரஷீத் கான் அவர்கள் ஹிந்து மதத்திற்கு மாறிய வாசிம் ரிஸ்வி-யின் தலையை வெட்டி யார்? என்னிடம் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுப்பேன். அவர்களின் மீதான நீதிமன்ற வழக்குகளையும் எனது வழக்கறிஞர்களே பார்த்து கொள்வார்கள் என சர்ச்சைக்குறிய வகையில் அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

/https://twitter.com/OpIndia_com/status/1468430131735764997


Share it if you like it